தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவர் விஜய், “எல்லோருக்குமான தலைவர் அம்பேத்கர்” எனும் புத்தகத்தை வெளியிடுகிறார்.
வரும் டிசம்பர் 6-ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று புத்தகத்தை வெளியிடவுள்ள விஜய், அந்த நிகழ்ச்சியில் சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
விகடன் குழுமத்தின் நிர்வாக இயக்குனர், பா.சீனிவாசன் வரேவேற்புரையாற்ற இருக்கிறார்.
சென்னை உயர்நீதி மன்றத்தின் மேனாள் நீதிபதி, திரு.கே.சந்துரு புத்தகத்தை பெற்றுக்கொண்டு சிறப்புரை ஆற்ற இருக்கிறார்.
ஆனந்த விகடனின் ஆசிரியர், திரு.தி.முருகன் நன்றியுரை ஆற்ற இருக்கிறார்.