அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் இருவரும் தங்களுக்கு திருமணம் முடிந்து விட்டது என்ற தங்களது உறவு நிலை மேம்பாட்டு செய்தியை செப்டெம்பர் மாதம் அதிகாரப்பூர்வமாக அறிவித்திருந்தனர். வனபர்த்தியில் உள்ள 400 ஆண்டுகள் பழமையான கோவிலில் நெருங்கிய நண்பர்கள் மற்றும் குடும்ப உறுப்பினர்களுடன் திருமண உறுதிமொழியை இருவரும் பரிமாறிக்கொண்டனர்.
அதனைத்தொடர்ந்து தற்போது அதிதி ராவ் ஹைதாரி தனது திருமண புகைப்படங்களை சமூக வலைதளத்தில் பதிவிட்டு இருக்கிறார்.
அதிதி ராவ் ஹைதாரி மற்றும் சித்தார்த் இருவரும் 2021-ஆம் வருடம் பிப்ரவரியில் தெலுங்குத் திரைப்படமான மகா சமுத்திரம் படப்பிடிப்பில் சந்தித்த தருணத்திலிருந்து இவர்களுக்கு இடையே காதல் பிரகாசமாகத் தொடங்கியது. அதிதி ராவ் ஹைதாரி அல்லது அட்டு, அவரது கணவர் அன்புடன் அழைக்கும் விதமாக, சித்தார்த்தின் வசீகரத்தில் அதிதி மயங்கிவிட்டார் என்றுதான் சொல்லவேண்டும். பல அறிக்கைகளின்படி, படத்தின் படப்பிடிப்பின் போது இருவரும் நெருக்கமாகி, டேட்டிங் செய்துகொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
விஷயங்களைப் பகிரங்கப்படுத்த விரும்பாமல், தம்பதியினர் தங்கள் காதல் சந்திப்பை ஊடக்கத்தினரிடமிருந்து மறைத்தே வைத்திருந்தனர். இருப்பினும், பாலிவுட்டில் நீண்ட காலமாக வதந்தி பரவாமல் இருப்பது எளிதானது அல்ல. அவர்களின் உறவின் உரையாடல் டின்சல் டவுனிலும், இறுதியில் சமூக ஊடகங்களிலும் பரவத் தொடங்கியது. ஏப்ரல் 2022 இல் இன்ஸ்டாகிராமில் சித்தார்த்தின் பிறந்தநாளுக்கு ஹைதாரி வாழ்த்து தெரிவித்ததை அடுத்து அந்த வதந்தி(தீ) மேலும் பரவியது.