திமுக எதிர்க்கட்சித் தலைவர் உதயநிதி ஸ்டாலின் கைது செய்யப்பட்டதை கண்டித்தும், த.வெ.க.அரசின் சர்வாதிகாரப் போக்கை எதிர்த்தும், போரூர் சந்திப்பில் மதுரவாயல் தெற்கு பகுதிக் கழகம் சார்பில் பகுதி செயலாளர் காரம்பாக்கம் கணபதி தலைமையில் மாபெரும் மறியல் போராட்டம் நடைபெற்றது. இதில், தலைமை செயற்குழு, தலைமை பொதுக்குழு உறுப்பினர்கள் அருணாச்சலம், செல்வகுமார், பகுதி கழக நிர்வாகிகள் செல்வராஜ், பால்பாண்டியன், பாரதி, ராஜீ எம்.சி.வட்டக் கழகச் செயலாளர்கள் சி.ரமேஷ்ராஜ்.சி.சுந்தர்.அ.மோசஸ்.ஜெ.பாஸ்கரன்.தி.சார்லஸ், செல்வம் உட்பட பல கலந்து கொண்டனர்.