ஈரோடு மாவட்டத்திற்கு நெசவாளர் அணி செயலாளராக ராசு என்கின்ற பழனிச்சாமியும், மாவட்ட மீனவர் பிரிவு செயலாளராக பழனிவேல் என்பவரையும் ஈரோடு மாநகர மாவட்ட செயலாளர் மனோகரன் பரிந்துரை செய்ததில், அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி நியமனம் செய்துள்ளார். ஈரோடு மாவட்ட அசோகபுரம் பகுதி செயலாளர் ஜெயராஜ் என்கிற முனுசாமியை இவர்கள் சந்தித்து, வாழ்த்து பெற்றனர்.